Monday, 21 January 2013

காதல் வசப்படும்போது

காதல்  வசப்படும்போது

 காதல்  வசப்படும்போது
நிலவாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
சூரியனாய் வாருங்கள்
நான் அதன் வெப்பத்தை எடுத்துக்கொண்டு
இருண்ட வனத்திற்கு ஒளியூட்டுவேன்  


காதல்  வசப்படும்போது
நதியாகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
வெள்ளமாக வாருங்கள்
அதன் ஆவேசத்தை எடுத்துச் சென்று
விரக்தியின் அணைகளை நான் உடைத்தேறிவேன்

காதல்  வசப்படும்போது
மலராகி விடாதீர்கள்
உங்களால் முடிந்தால்
இடியாக வாருங்கள்
அதன் கர்ஜனையை என் மார்பிலே ஏந்தி
யுத்தகோஷத்தை ஒவ்வொரு மூலைக்கும் அனுப்புவேன்

காதல்  வசப்படும்போது 
பறவையாகி விடாதீர்கள் 
உங்களால் முடிந்தால்
புயலாக வாருங்கள்
அதன் சக்தியைக் கடன்வாங்கிப்
பாவத்தின்  அரண்மனையை
நான்  இடித்துத் தகர்ப்பேன்

நிலா
நதி
மலர்
நட்சத்திரங்கள்
பறவைகள் -
 நாம் அவற்றைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்
ஆனால் இன்று
இந்த இருட்டில்
கடைசி யுத்தம் பாக்கி இருக்கிறது
நமது  பாசறையில் நமக்குத் தற்போது தேவையாக
இருப்பது தீ தான் !

-வங்காளக் கவிஞர் முராரி முகோபாத்யாயா

 

No comments:

Post a Comment